Saturday 20 May 2017

இதற்கா அவ்வளவு ஊதியம்?

2005 ஆம் ஆண்டு இந்த மேனிலை இரண்டாமாண்டு பொதுத்தமிழ் பாடநூல் அறிமுகமானது.

இன்று 2017.  பன்னீராண்டுகள் நிறைவெய்திவிட்டன. இதுவன்று நான் கூறவந்தது.

இளங்கலை - மூன்றாண்டு
முதுகலை  -  ஈராண்டு
கல்வியியல் - ஓராண்டு. ஆக, ஆறாண்டுகள் பயின்றவொருவர் அதன்பின் ஓராண்டுகழித்து பணியமர்ந்தாலும்,
தான் மேனிலையில் பயின்ற புத்தகத்தை ஐந்தாண்டுகள் கற்றுத்தருபவராகிறார்.

தான்படித்தபுத்தகத்தைக்கற்றுத்தருவதற்கு அரசுதரும் ஊதியம் எத்தனையாயிரம் தெரியுமா?(பிறபாடங்களுக்கும் இது பொருந்தும்)

வாழ்க தமிழாசிரியர்கள்!