Monday 16 October 2017

வாழுங்கவிஞர்கள்......

வாழுங்கவிஞர்கள்......
=======================

கவிதைகளைப்போலவே
கவிஞர்களுக்கும்
என்றுமே மரணமில்லை......
அவர்கள் இறந்தபின்னரும்
வாழ்கிறார்கள் என்பதை
அறிந்ததும் அரண்டுபோனேன்.
ஆம்,
பிளஸ்டூ பொதுத்தமிழில்
சுரதாவும், அப்துல் ரகுமானும்
2017 பதிப்பில்
இன்றும்
'வாழுங்கவிஞர்களாய்' ......