Saturday 25 March 2017

யாரெல்லாம் நூலாசிரியர்கள்?

யாரெல்லாம் நூலாசிரியர்கள்? ============================

சமச்சீர்க்கல்வி - 1 முதல் 10 வகுப்பு அனைத்துப்- பாடப்புத்தகங்கள் எழுதிய நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள், குழுத்தலைவர்கள் பெயர்கள் அந்தந்த பாடநூல்களிலிருந்து நீக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.         

     அவர்கள் பாடநூல் எழுதியதற்கான ஊதியத்தை பணமாகப்பெற்றிருப்பார்கள்.  ஆனால், அவர்களது -"CREATIVE" - படைப்பாக்கமின்றி  பாடநூல்  அதில் இடம்பெற்றுள்ள படங்கள், பயிற்சிகள் உருவாகியிருக்கமுடியுமா? 

அதேவேளையில், பன்னீராண்டுகளுக்கு முன்னெழுதப்பெற்று இன்றுவரையில் நடைமுறையிலுள்ள மேனிலைமுதலாமாண்டு மற்றும் மேனிலையிரண்டாமாண்டு பாடநூல்களில் அந்தந்தப்பாடப்புத்தகங்கள் எழுதிய நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள், குழுத்தலைவர்கள் பெயர்கள் முறையாக அச்சிடப்பட்டுள்ளனவே?  அவர்களுக்குமட்டும் ஒரு நீதியோ?

No comments:

Post a Comment